மன்னிப்பு கேட்க முடியாது. ரூ.50 கோடி வழக்கை சந்திக்க தயார்! ரூபா
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்த துணிச்சலான பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு சிறைத்துறை உயரதிகாரி சத்தியநாராயண ராவ் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், ‘”தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்காக, ரூபா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த நிலையில் இதுகுறித்து ரூபா ஐபிஎஸ் அவர்கள் கருத்து கூறியபோது, ‘”எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது உண்மைதான். ஒரு டி.ஐ.ஜி-யாக நான் எனது கடமையைத்தான் செய்தேன். இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த வழக்குகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில், விசாரணையின் முடிவில்தான் உண்மைகள் வெளியில் வரும்” என்று பதிலளித்தார்.
ரூபாவின் இந்த பதிலை அடுத்து நோட்டீஸில் கூறியபடி சத்தியநாராயண ராவ் அவர்கள் வழக்கு போடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.