shadow

அரசு மருத்துவமனையில் பெண்ணின் கண்களை கடித்த எலி: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் கண்களை எலி கடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் 50 வயது பெண் ஒருவர் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார்

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருடைய கண்களை எலி கடித்துவிட்டதாக தெரிகிறது

இது குறித்து விசாரணை செய்ய மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது