shadow

கனமழை எச்சரிக்கையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கனமழை அறிவிப்பு காரணமாக ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை கலெக்டர் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு பாதுகாப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.