shadow

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் நேற்று முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வந்ததில் 23 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் சுமார் 200 பவுன் தங்க வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான மதிப்புள்ள நில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.