சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை. பாமக ராமதாஸ்
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்த வருபவரை தமிழக அமைச்சர்கள் சந்தித்தது மாபெரும் தவறு என்றும், சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள குற்றவாளி சசிகலாவை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் சந்தித்தது தவறு. அவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பெங்களூர் சிறைச்சாலையில் அமைச்சர்கள் அடிக்கடி சந்திக்கும் அளவுக்கு விதிமீறல் இருப்பதால் அவரை உடனடியாக திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.