shadow

8 வழிச்சாலை இனி சூப்பர் வழிச்சாலை என்று அழைக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்க பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘எட்டு வழிச்சாலை அமைந்தால் தொழில் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அதே நேரத்தில் விவசாய நிலங்களை அழிக்காமல் இந்த சாலையை அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ரஜினியின் ஆதரவு 8 வழிச்சாலைக்கு கிடைத்தது குறித்து கருத்து கூறிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை என்று அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த கருத்து குறித்து திமுகவின் துரைமுருகனிடம் கேட்டபோது, ‘அவர் இமயமலை சென்று அறிவு பெற்றவர், அதனால் அவர் அப்படித்தான் பேசுவார் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply