ரஜினி ஒரு ஊழல் நடிகர். அவருக்கு முதல்வராகும் தகுதி இல்லை. சுப்பிரமணியம் சுவாமி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வாங்கி கட்டிக்கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். அவரது கருத்தை அவரது கட்சியினர்களே சீரியஸாக எடுத்து கொள்வதில்லை
இந்த நிலையில் இன்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் சுவாமி ரஜினியின் அரசியல் பேச்சு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஜினி ஒரு ஊழல் நடிகர் . அவர் அரசியலுக்கு வரக்கூடாது. ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது. முதல்வராக தகுதி அவருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி தமிழர் இல்லை என நான் ஒருபோதும் கூறியதில்லை என்றும், அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்று திமுகதான்
பிரச்சினை கிளப்பியது என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.