கமல்ஹாசனை டுவிட்டரில் வாழ்த்திய ரஜினிகாந்த்
சிவாஜி கணேசனுக்கு பின்னர் நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை தோற்றுவித்தவர் அவருடைய கலையுலக வாரிசு கமல்ஹாசன். அவரை போலவே பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருதை தற்போது பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒருவருக்கொருவர் பக்கபலமாகவும், சோதனைகள் வரும்போது தோள் கொடுப்பவர்களாகவும், சாதனை செய்யும்போது வாழ்த்து தெரிவிப்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிரான்ஸ் அரசு செவாலியே விருதை கமல்ஹாசனுக்கு அறிவித்துள்ள நிலையில் இன்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
ரஜினியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் ஷேர்களும் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.