ஏப்ரல் முதல் சூறாவளி சுற்றுப்பயணம்: திருச்சியில் முதல் மாநாடு
நடிகர் கமல்ஹாசன் இம்மாதம் 21ஆம் தேதி அரசியல் கட்சி ஆரம்பித்து உடனே தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ரஜினியும் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் கமல்ஹாசன் மதுரை அரசரடியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ரஜினி தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ரஜினிகாந்த் தான் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சியை தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து கட்சி பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.