shadow

ரஜினி-விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட ஒரே விழா

rajini and vijayசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் சுமார் இருபது வருடங்கள் உதவியாளராக இருந்த ஜெயராமன், முதன்முதலாக ‘ஜேபிஆர் பிலிம்ஸ்’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் ‘கிருமி’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நக்கீரன்’ கோபால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சார்லி, படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன், உள்பட பலர்  கலந்து கொண்டார்கள். இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதையை காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன், ரஜினிக்கு உதவியாளராக இருந்தது மட்டுமின்றி இளையதளபதி விஜய்யின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். எனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மற்றும் விஜய் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஒரு திரைப்பட விழாவுக்கு ரஜினி மற்றும் விஜய் ஆகிய இரு முன்னணி நடிகர்களின் மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பேசிய முன்னணி இயக்குனர் ஒருவர் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இந்த விழாவில் ஒன்று சேர்ந்ததுபோல், விரைவில் ரஜினியும், விஜய்யும் ஒரு படத்தில் ஒன்று சேர்ந்து நடிக்க வேண்டும்’ என்ற தனது விருப்பத்தை வெளியிட்டார்.

Leave a Reply