shadow

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆபத்தும் வரும். சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று இதுவரை கூறி வந்த சுப்பிரமணியம் சுவாமி தற்போது மிரட்டும் வகையில் அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளதால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தரவில்லை என்ற கோபத்தில் இருக்கும் நிலையில் அவர் தனிக்கட்சி அமைத்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு வருமானவரி ரெய்டு உள்பட பல இடைஞ்சல்களை மத்திய அரசு செய்யும் என்று கூறப்பட்டு வருகிறது.

இதை உறுதி செய்வதை போல சுப்பிரமணியன் சுவாமியின் இந்த எச்சரிக்கை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியுடன் நேரடியாக மோதி வெற்றி பெற முடியாது என்பதாலே அவரை அரசியலுக்கு வரவிடாமல் செய்ய இதுபோன்ற பயமுறுத்தல்களை பாஜக செய்வதா கூறப்படுகிறது

Leave a Reply