நடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் ரஜினி, கமல் அஜித்…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் மௌனப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டுகாக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இன்று சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெறும் நடிகர் சங்க மௌனப்போராட்டத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.
இந்த போராட்டக் களத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், அஜித் குமார், சூர்யா, த்ரிஷா, பி.சி.ஸ்ரீராம், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.