ரஜினியின் முடிவால் அதிர்ச்சியில் மரணம் அடைந்த ரசிகர்
முதல்வர் பதவியை ஏற்கபோவதில்லை என்று ரஜினிகாந்த் எடுத்த முடிவால் அவரது ரசிகர் மன்ற நிர்வாகி பாபா முருகேஷ் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியை அடுத்த மணப்பாறையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்த பாபா முருகேஷ் என்பவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்தார். ரஜினியின் தீவிரமான ரசிகரான இவர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து மிகவும் ஆர்வமுடன் இருந்ட்ததாகவும் நேற்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்து இருந்ததாகவும் கூறப்படுகிறது
ஆனால் நேற்று ரஜினி முதல்வர் பதவி குறித்து எடுத்த முடிவால் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒருசிலர் ரஜினி எடுத்த முடிவால் அவர் மரணம் அடையவில்லை என்றும் விபத்து காரணமாக மரணம் அடைந்ததாகவும் கூறி வருகின்றனர். உண்மையில் பாபா முருகேஷ் எப்படி இறந்தார் என்பது விசாரணை செய்தால் மட்டுமே தெரிய வரும்
Leave a Reply
You must be logged in to post a comment.