இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவை தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் புறக்கணித்திருக்கும் நிலையில் மோடியின் நெருங்கிய நண்பரான ரஜினியும் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் அந்த விழாவில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு முன் நேற்று தமிழ் அமைப்புகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்களை கொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சே கலந்துகொள்ளும் விழாவில் ரஜினி கலந்துகொள்ள கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ரஜினியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ரஜினிகாந்த், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.
இன்று ஐதராபாத்தில் நடக்கும் லிங்கா படப்பிடிப்பிற்கு ரஜினி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.