shadow

3 தொகுதி இடைத்தேர்தல். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எத்தனை? ராஜேஷ் லக்கானி

rajeshlakhaniதமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இன்று அந்த மனுக்கள் பரிசீலை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் இதுவரை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட 29 பேரும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட 59 பேரும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட 37 பேரும் மனுதாக்கல் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தாக்கல் செய்த மனுக்களை திரும்ப பெற விரும்புவர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின்னர் 6ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply