shadow

அதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வலுவான தலைமையை இழந்து தற்போது புதிய தலைமையை கொண்டுள்ளது. இந்த தலைமையின் திறன் குறித்து தேர்தல் வந்தால்தான் தெரியும். ஆனால் அதற்குள் மத்தியில் ஆட்சி அமைக்க எங்களுடைய ஆதரவு தேவை என்ற விதத்தில் இரண்டு கட்சிகளும் பேசி வருகின்றன.

சமீபத்தில் ஸ்டாலின் ஆதரவு இல்லாமல் யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என திமுக நிர்வாகி ஒருவர் கூறிய நிலையில் இன்று அதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆள நினைப்பவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் கதவை தட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், எதிர்கட்சிகளை கூட நாங்கள் வரம்புமீறி பேசுவது இல்லை. என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply