shadow

சிறையில் திடீர் உடல்நலக்குறைவு. ராஜபக்சே சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

fazilநிதி மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் இளைய சகோதரர் பசில் ராஜபக்சே நேற்று மாலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலைக்கு என்ன என்பது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டது.

நேற்று முன் தினம் காலை ராஜபக்சேயின் இளைய சகோதரர் பசில், தனது சகோதரரின் ஆட்சிகாலத்தில் நடந்த வாழ்வாதார நிதி முறைகேடு தொடர்பாக நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பசிலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பசில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply