shadow

மழையால் 3ஆம் நாள் ரத்து: இன்றும் நாளையும் 98 ஓவர்கள் வீச முடிவு

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது.

இரண்டாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆட தயாராக இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் நேற்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக இன்றும் நாளையும் 98 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும் நாளையும் மழை பெய்தால் ஆட்டம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளது.

Leave a Reply