கொரோனாவால் குளிக்க ஆளில்லை

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் அங்குள்ள அனைத்து அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் என்பது தெரிந்ததே., அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள்

ஆனால் தற்போது கோடை மழை பெய்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வருகிறது ஆனால் குளிக்கத்தான் ஆளில்லை

அருவிக்கு செல்லும் பகுதியில் தற்போது கயிறு கட்டி அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாவுக்கு யாரும் செல்லாத காரணத்தினால் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply