திடீரென தோன்றிய வளிமண்டல சுழற்சி: சென்னைக்கு மழை வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை ஏற்பட்டுள்ள இந்த திடீர் வளிமண்டல சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஓட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே சென்னயில் சமீபத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.