shadow

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் தமிழக மற்றும் ஆந்திர பகுதிகளிலும் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்