shadow

ராகுல்காந்தி விமானத்தில் தீடீர் கோளாறு: கொலை செய்ய சதியா?

கர்நாடக மாநில பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல்காந்தியின் விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவரை கொலை செய்ய சதி நடப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

வரும் மே 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று ராகுல்காந்த் டெல்லியில் இருந்து ஹூப்ளிக்க விமானம் சென்றார்.

ராகுல்காந்தி சென்ற விமானம் தரையிறங்கும்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெரிய அளவில் சப்தம் வந்ததாகவும், இதுகுறித்து புகார் அளித்திருப்பதாகவும் காங்கிரஸார் தெரிவித்துள்ளனார்.

சிறப்பு பாதுகாப்பு உள்ள ராகுல் சென்ற தனி விமானத்தின் பராமரிப்பு குறித்தும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்த விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply