shadow

தமிழக விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு அளித்த ராகுல்காந்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு இதுவரை ஆக்கபூர்வமாக கண்டுகொள்ளாத நிலையில் இன்று காலை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை கொடுத்தார்.

விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 18வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது ராகுல்காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் வலுவடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கையை கேட்டாறிந்தார். அதோடு அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இருந்தார்.

Leave a Reply