shadow

காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் படுதோல்வியை சந்தித்து வருகிறது.

நேரு குடும்பத்திலிருந்து காங்கிரஸ் மீண்டால் மட்டுமே காங்கிரஸ் புத்துயிர் பெறும் என உள்கட்சியிலேயே தலைவர்கள் கருத்துக்களை கூற ஆரம்பித்து விட்டனர்.

இதன் காரணமாக ஏற்கனவே சோனியாகாந்தி கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் தற்போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

முதல் கட்டமாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது