shadow

அதிகாலையில் நடந்த கார் விபத்து. பிரபல கார் பந்தய வீரர் பலி

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் என்பவர் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை பட்டினப்பாக்கம் அருகே மனைவியுடன் தனது BMW காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்து காரணமாக பலியானார். இந்த விபத்தில் அவருடைய மனைவியும் பரிதாபமாக பலியானார்

அஸ்வின் சுந்தர் தனது BMW காரை பயங்கர வேகத்தில் ஓட்டிகொண்டு சென்றதாகவும், அப்போது அந்த கார் திடீரென அவருடைய கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தில் மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார். மரத்தில் கார் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே அஸ்வின் மற்றும் அவருடைய மனைவி நிவேதிதா ஆகியோர் பலியாகினர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வெகுவேகமாக பரவி வருகிறது.

Leave a Reply