shadow

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு தகுதி

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்

இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் தாய்லாந்து நாட்டின் நிட்சவோன் ஜிண்டாபோலை வீழ்த்தினார். இதன் மூலம் சிந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்

அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவை 21-10, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்

மற்றொரு இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் யூசியாங் ஹூவாங்கை எதிர்கொண்டார். இதில் 21-11, 15-21, 22-20 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்றார். இதனால் ஸ்ரீகாந்த் தொடரைவிட்டு வெளியேறினார்.

pv sindhu qualified to England open badminton

Leave a Reply