shadow

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை, பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்று நடைபெற்ற 37வது மற்றும் 38வது போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply