ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு?
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு வரும் 14-ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்லது.
பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்களும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசுக்கு முன்னரே பஞ்சாப், கோவா மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.