ஐ.பி.எல் கிரிக்கெட்: தோனியின் புனே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தோனியின் புனே அணி இழந்தபோதிலும் நேற்றைய போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்து ஆறுதல் வெற்றியை பெற்றது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தோனி தேர்வு செய்ததால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய புனே அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவீஸ் விதியின்படி புனே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.