shadow

விஜய்யின் ‘புலி’ படத்தயாரிப்பாளர் திடீரென உண்ணாவிரதம் இருப்பது ஏன்?
pts
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரும், சமீபத்தில் வெளியான ஜீவா-ஹன்சிகாவின் ‘போக்கிரி ராஜா’ படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் திடீரென இன்று காலை முதல் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும், அவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக கூறியபோதிலும் உண்ணாவிரதத்தின் உண்மையான காரணத்தை அவர் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யிடம் பல ஆண்டுகள் பி.ஆர்.ஓவாக பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் ‘புலி’ மற்றும் ‘போக்கிரி ராஜா’ ஆகிய இரண்டு படங்களின் தொடர் தோல்வியால் கடந்த பல ஆண்டுகள் சேமிப்பை அவர் இழந்துவிட்டதாகவும் மேலும் அவர் தற்போது பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply