கொரோனா வைரசால் தப்பித்த நாஞ்சில் சம்பத்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களை கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அவமரியாதையாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதுச்சேரி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர் இதனையடுத்து அவர் ஆஜராகாததால் அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு புதுவை போலீசார் சென்றனர்
ஆனால் போலீசார் தன்னை ஆஜராகுமாறு துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் வழக்கு பதிவு செய்தார். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தன்னால் புதுவைக்கு வந்து ஆஜராக முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்
அவரது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஏப்ரல் 24-ம் தேதி வரை நாஞ்சில் சம்பத்தை ஆஜராகுமாறு புதுவை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நாஞ்சில் சம்பத் ஆஜராகும் தேதி குறித்து புதிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.