shadow

கவர்னர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள். முற்றுகிறது ஆபாச பட விவகாரம்

புதுவை கவர்னர் கிரண்பேடியின் வாட்ஸ் அப் குரூப்புக்கு புதுவை அரசின் கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார் ஆபாச படம் அனுப்பிய விவகாரத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு கவர்னர் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் சிவக்குமாரை போலீசார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

பிசிஎஸ் அதிகாரியான சிவகுமாரை காவலில் வைத்தது போன்ற இந்த சம்பவத்திற்கு புதுவை அமைச்சர்களும், பிசிஎஸ் அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவை அமைச்சர் கந்தசாமி கிரண்பேடியை நேரடியாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கவர்னர் விடுத்த அழைப்பை அனைத்து பிசிஎஸ் அதிகாரிகளும் புறக்கணித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த கிரண்பேடி டெல்லி சென்று உள்துறை அமைச்சகத்தில் புகார் செய்துள்ளார்.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் வரும். எனவே உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலாளரை இதுகுறித்து விளக்கம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply