shadow

நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு முடிவுகளை அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இதில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக சான்றிதழ்களை பெற்றக் கொள்ளலாம்.