திடீரென பஞ்ச்சரான பைக்: மொபைல் போன் சுவிட்ச் ஆப்: என்ன ஆச்சு பெண் டாக்டருக்கு?

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் டாக்டர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி. இவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது பைக் பஞ்சர் ஆனது. இதுகுறித்து அவர் தனது சகோதரி பாவியா ரெட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக வரும்படியும் பைக் பஞ்சர் செய்யப்படும் வரை அருகிலுள்ள டோல்கேட்டில் இருக்கும்படியும் அவரது சகோதரி அறிவுறுத்தியுள்ளார்

இந்த நிலையில் திடீரென அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் பதட்டம் அடைந்த அவரது சகோதரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரியங்கா ரெட்டியை காணவில்லை. எனவே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூர்-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் பிரியங்கா ரெட்டி பிணமாக மீட்கப்பட்டார்

பாதி எரிந்த நிலையில் பிணமாக இருந்த பிரியங்கா ரெட்டி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #RIPPriyankaReddy என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply