எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நால்வர் இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பிரியங்கா ரெட்டியின் தந்தை ,\
எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும், போலீசார் மற்றும் அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்ட்டர் செய்தததை கேள்விப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் சென்றபோது போலீசாரை நோக்கி மகிழ்ச்சியுடன் கையசைத்து மகிழ்ந்த வீடியோ காட்சி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நால்வர் என்கவுண்டர் என்பது சட்டப்படி தவறு என்றாலும் இந்த என்கவுண்டருக்கு பொதுமக்களிடம் இருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது, அடுத்ததாக இதே போன்ற தவறை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று கூறப்படுகிறது

Leave a Reply