shadow

auto1704_01சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கனவே பிரிபெய்டு ஆட்டோ சர்வீஸ் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இன்று முதல் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலும் பிரிபெய்டு ஆட்டோ சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியினால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் பலர் பயனடைவர்.

சென்னை எக்மோரின் பிரதான நுழைவு வாயிலில் இன்று முதல் பிரிபெய்டு ஆட்டோ சர்வீஸ் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதியினை தென்னக ரயில்வே டிவிசனல் மானேஜர் பி.கே.மிஸ்ரா தொடங்கி வைத்தார். தற்போது 83 ஆட்டோக்கள் இந்த சர்வீஸில் ஈடுபட்டு வருவதாகவும், நாளடைவில் இந்த ஆட்டோக்களின் எண்ணிக்கை 150 வரை அதிகரிக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணிகள் உள்பட அனைவரும் இந்த ஆட்டோ சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளுமாறு தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply