shadow

சென்னை ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்த ரயில் ஒன்றில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிரேம் ஆனந்த் வழக்கறிஞர் என்பதும், பாஜகவை சேர்ந்த அவர் 2006-ம் ஆண்டு தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம் – சென்னை ரயிலில் நள்ளிரவில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது 9 வயது சிறுமியிடம் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனை உணர்ந்த அந்த சிறுமி உடனே அலற கண் விழித்து சிறுமியின் பெற்றோர் பிரேம் ஆனந்தை கையும் களவுமாக பிடித்து அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கூறினர்.

இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது டிக்கெட் பரிசோதகர், பிரேம் ஆனந்தை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் பிரேம் ஆனந்தை கைது செய்த ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply