தேவையான பொருட்கள்:

இறால் – அரை கிலோ
மிளகாய் பொடி – ஒரு டீ ஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
சோம்பு பொடி – அரை டீ ஸ்பூன்
இஞ்சி & பூண்டு விழுது – அரை டீ ஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒன்றரை டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை நீக்கி விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக நான்கு முறை நீர் விட்டு கழுவ வேண்டும். பிறகு அதனுடன் மஞ்சள் பொடி, அரை டீ ஸ்பூன் மிளகாய் பொடி, சோம்பு பொடி, உப்பு, இஞ்சி & பூண்டு விழுது எல்லாம் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்க வேண்டும்.

பச்சை மிளகாயை சிறிது பெரிய துண்டங்களாக நறுக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து பாதி எண்ணை ஊற்றி இறால் கலவையை போட்டு வதக்க வேண்டும். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். நீர் முழுதும் வற்றிய பிறகு இறக்க வேண்டும். வேறு வாணலியில் மீதமுள்ள எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மூன்று நிமிடம் வதக்கியதும் மீதமுள்ள அரை டீ ஸ்பூன் மிளகாய் பொடி சேர்க்க வேண்டும். பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு இறால் சேர்த்து, பத்து நிமிடம் கிண்டி இறக்க வேண்டும்.

Leave a Reply