shadow

பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாத நேரத்தில் பிரதமரின் வெளிநாட்டு பயணம் ஏன்? பிரவீன் தொகாடியா

‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்? என்று சமீபத்தில் விஸ்வ இந்து பிரீஷத் அமைப்பில் இருந்து விலகிய பிரவீன் தொகாடியா கேள்வி எழுப்பி உள்ளார்.

நேற்று குஜராத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் தொகாடியா கூறியபோது, ‘‘‘இன்று நமது வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நமது மகள்கள் வீட்டில் பாதுகாப்பாக இல்லை. அப்படி இருக்கும்போது, நமது பிரதமர் வெளிநாட்டுக்கு செல்வது ஏன்?’’ என்று தொகாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பா.ஜனதாவை எதிர்த்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பிரவீன் தொகாடியா காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply