shadow

அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை செய்ய முடியவில்லை. தினகரனை சந்தித்த பின்னர் பிரபு எம்.எல்.ஏ பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு இன்று காலை தினகரனை சந்தித்து பேசிய நிலையில் இந்த சந்திப்பு குறித்து சற்றுமுன்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவை வழிநடத்தவும், தலைமை தாங்கவும் சசிகலா மற்றும் தினகரனுக்கே திறமை உள்ளது. தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் அனைவரும் செல்ல வேண்டும். மக்கள் ஆதரவு தினகரனுக்குத் தான் உள்ள என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் இருந்து தெரிந்து கொண்டேன். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் இருந்து யாராவது ஒருவர் அடுத்த முதல்வராக வர வாய்ப்பு உள்ளது

என்னால் தொகுதி பணிகளை என்னால் சரியாக செய்ய முடியவில்லை, நிறைய முட்டுக்கட்டைகள் உள்ளது. அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை. எம்எல்ஏவின் பணிகளை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டை போடப்படுகிறதுஎன் பிரச்சினைகள் என்னவென்று முதலமைச்சருக்கு தெரியும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை –

Leave a Reply