shadow

பாகுபலி’ படம் போல உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்தவர் பரிதாப மரணம்

திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை நிஜம் என நம்பி அதைபோலவே செய்ய முயற்சித்து உயிர்விட்ட ரசிகர்கள் பலர் உலகம் முழுவதும் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ் உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் காட்சியை பார்த்து அதேபோல் விழுந்தவர் பரிதாபமாக பலியானார்

மும்பையைச் சேர்ந்த இந்திராபால் படில் என்ற தொழிலதிபர், ஷாஹாபூரில் உள்ள மஹூலி கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நீர்வீழ்ச்சியின் மீது ஏறி பாகுபலி பிரபாஸ் போல ஸ்டைலாக குதித்துள்ளார். ஆனால் வெற்றிகரமாக தரையைச் சேராமல், இடையிலேயே பாறைகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த இந்திராபாலின் சகோதரர், யாரோ திட்டமிட்டு அவரை தள்ளிவிட்டதாகவும் இந்த சதியை அம்பலப்படுத்த விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று உயிரிழப்பு நிகழ்வது இது முதல் முறையல்ல. ஆண்டுதோறும் இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து உயிர்விட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த நீர்வீழ்ச்சியை தடை செய்யப்பட்ட பகுதியாக போலீசார் அறிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Prabhas’ waterfall jump in ‘Baahubali’ results in a real life fatal accident.

Leave a Reply