shadow

ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய ரூ.1000 கோடி நாயகன்

இந்திய திரையுலகில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை ரூ.1000 கோடி வசூல் என்பதுதான். இதுவரை 1000 கோடிக்கு எத்தனை சைபர் என்று கூட திரைத்துறையினர்களுக்கு தெரிந்திருக்காது. அந்த சாதனையை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி-பிரபாஸ் டீம் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பெரிய சாதனை செய்தும் இயக்குனர் ராஜமெளலியும், நாயகன் பிரபாசும் எளிமையாக இருப்பது அவர்கள் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கின்றது.

இந்த நிலையில் தனது குழுவினர்களுக்கும், தனக்கும் மாபெரும் வெற்றியை தேடித்தந்த ரசிகர்களுக்கு பிரபாஸ் தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது.

மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்’

இவ்வாறு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்

Leave a Reply