shadow

பண மதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அருண்ஜெட்லி விளக்கம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபோது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று இதுகுறித்து பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைடுகளைத்தான் அதிகம் பாதித்துள்ளனர் என்று கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் நக்சலைட்களுக்கு போதிய பணம் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால், அவர்களால் தங்களது திட்டங்களை செயல்படுத்த போதிய பணம் கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர். இதற்கு, தற்போது குறைந்துள்ள போராட்டங்களே சாட்சி. ஏனெனில், முன்னெல்லாம், போராட்டம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் தெருக்களில் கூடுவர். இப்போது 20 பேர் கூட போராட்டத்திற்கு வருவதில்லை

பண மதிப்பிழப்பு திட்டத்தால் முன்னர் பொருளாதாரத்திற்கு வெளியே புழக்கத்தில் இருந்த பணம், தற்போது முறையாக வங்கி நடைமுறைக்குள் வந்துள்ளது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சியில்தான் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பினாமி சொத்து தடை, ஸ்பெக்டரம், இயற்கை வளங்கள் நேர்மையான முறையில் ஒதுக்கீடு போன்றவை மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.

Leave a Reply