அர்ஜென்டினாவை சேர்ந்த 76 வயது மரியோ பெர்காக்லியோ தற்போது போப்பாக பதவி வகித்து வருகிறார். இப்போது போப் பிரான்சிஸ் என அழைக்கப்படும் இவர் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார்.
அப்போது பெருகி வரும் ஊழல்களை பற்றி விமர்சிக்கும் வகையில், ஊழலில் ஈடுபட்டு ஏமாற்றுபவர்களை பூமியில் விட்டுவைப்பதைக் காட்டிலும் அவர்களின் கழுத்தில் மைல்கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும்.
நாட்டையும், மக்களையும் வஞ்சித்து ஊழலின் மூலம் பணத்தை கொள்ளையடித்து அதே பணத்தை தேவாலயங்களுக்கு நன்கொடையாக அளிப்பவர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்ட வாழ்க்கையை வாழும் பாவிகளாக உள்ளனர்.
ஊழலின் மூலம் தங்களது குடும்பங்களை பராமரிப்பவர்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை இழந்தவர்கள். இவர்கள் ஊழல் மூலம் வந்த பணத்தை செலவழித்து குடும்பத்தாருக்கு அசுத்த உணவை அளிப்பவர்கள் என பேசியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.