‘வீரம்’ படத்தின் வெற்றியை அடுத்து அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். இது அஜீத்தின் 55வது படமாகும். இந்த படத்தின் பூஜை சென்னையில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடக்க இருக்கிறது.

ஆரம்பம் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் இந்த படத்தையும் தயாரிக்கின்றார். விஜய், மற்றும் சூர்யா படங்களை இயக்க முடிவு செய்து  கடைசி நேரத்தில் அந்த படங்களை இயக்க முடியாமல் போனதால் மனவருத்தத்தில் இருந்த கவுதம் மேனனை அஜீத் தன் வீட்டிற்கு அழைத்து ஆறுதல் கூறியதோடு, தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார். எனவே இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கின்றாராம் கவுதம் மேனன்.

சிம்பு, பல்லவி நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் படப்பிடிப்பை இரவுபகலாக எடுத்து முடித்துவிட்ட கவுதம் மேனன், தற்போது அஜீத் படத்துக்கான திரைக்கதையை மெருகேற்றும் முயற்சியில் இருக்கிறார். இந்த படத்தின் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

 

Leave a Reply