shadow

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மற்றும் அமரர் கல்கியின் வாசகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.