shadow

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டும் போதுமா? பொன்.ராதாகிருஷ்ணன்

காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிடுமா? காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வர என்ன வழி என்று பாஜக யோசித்து வருகிறது என மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காவிரி பிரச்சனையில் உண்மையை நிலையை அவர் கூறியிருந்தாலும், இந்த பேச்சு சர்ச்சைக்குரிய பேச்சு என்று தமிழகத்தில் உள்ள பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சனை குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் கூறியதாவது:

காவிரி பிரச்னையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு இரு மாநிலங்களுக்கும் பொதுவானது. ஆனால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாம் போராட்டத்தில் ஈடுபட்டால் கர்நாடகாவில் பல வாட்டாள் நாகராஜன்கள் உருவாவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டும் போதுமா ? காவிரியில் தண்ணீர் வரவழைக்க என்ன வழி ? பாஜக யோசித்துச் செயல்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

Leave a Reply