முதல்வர் ஓ.பி.எஸ் உடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு
கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று கொண்ட நிலையில் அவரே முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்று அதிமுகவின் முக்கிய தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையும் இதே கருத்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைசெயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் குளச்சல் துறைமுகம், தமிழக சாலைப் பணிகள், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. வேறு அரசியல் விஷயங்களை இருவரும் பேசினார்களா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.