shadow

தம்பிதுரை 40 தொகுதிகளிலும் போட்டியிடலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல்

பாஜகவின் சொல்படிதான் அதிமுகவின் ஆட்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் சமீபகாலமாக அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக எம்பி தம்பிதுரை அதிகமாக பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தம்பிதுரை அளித்த பேட்டி ஒன்றில், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ தம்பிதுரை வேண்டுமானால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம்’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.

Leave a Reply