தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் திடீர் வெளியேற்றம்: பெரும் பரபரப்பு
சற்றுமுன் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் திடீரென தஞ்சாஇ பெரிய கோயிலுக்குள் ஆய்வு நடத்தினர். அதன் காரணமாக கோயிலுக்குள் இருந்த அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பெரிய கோயிலுக்குள் சென்றதும் கோயிலின் முக்கிய கதவுகள் மூடப்பட்டது. இதனையடுத்து 50 பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்பு குழு ஆய்வில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரிய கோவிலில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டதா? அங்கிருந்த சிலைகள் அனைத்தும் பத்திரமாக இருக்கின்றதா? என்பதை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வுக்கு பின்னரே முழு விபரங்களும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.